×

தேனி புத்தக திருவிழாவிற்கு வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பிசிபட்டி சேர்மன் வரவேற்பு

தேனி, மார்ச் 5: தேனி மாவட்ட புத்தக திருவிழாவிற்கு வந்த அமைச்சர் ஐ.பெரியசாமியை பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் நேற்று முன்தினம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்த புத்தக திருவிழாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்எல்ஏக்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் வக்கீல்.மிதுன்சக்கரவர்த்தி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது பேரூராட்சி துணை சேர்மன் மணிமாறன் உடனிருந்தார்.

Tags : PCP ,Patty ,Minister ,I. Periyasamy ,Theni Book Festival ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி